http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 69

இதழ் 69
[ மார்ச் 16 - ஏப்ரல் 15, 2010


இந்த இதழில்..
In this Issue..

நூற்றாண்டு நாயகர்கள் - தமிழர் பண்பாடு
வாசிப்பில் வந்த வரலாறு - 2
கயிலைப் புனிதர் சைவத்திரு ப.மூக்கப்பிள்ளை
Gandharva Ganam - Book Review
குடவோலை கண்ட தமிழ்க்குடியே!
இதழ் எண். 69 > கதைநேரம்
வாசிப்பில் வந்த வரலாறு - 2
ச. கமலக்கண்ணன்
தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி


'இறந்த மாந்தன் திரும்பவும் தாயின் கருப்பையில் பிறக்கிறான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், அவனது மறுபிறவிக்குத் தேவைப்படும் உடம்பிற்கான எலும்புகளையும், அவன் பயன்படுத்திய கருவிகள், அணிகலன்கள் போன்றவற்றையும் மண்பாண்டங்களில் வைத்துப் புதைக்க வேண்டும் என்று சங்ககால மாந்த சமுதாயம் கருதியது.'

இப்படி ஆரம்பிக்கிறது அந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரையை எங்குப் படித்தேன் என்று கூறுவதற்கு முன்னர், தமிழ் வளர்க்கும் ஒரு தமிழரைப் பற்றிச் சிறு விளக்கம். பொள்ளாச்சியைச் சேர்ந்த திரு. நசன் என்பவரைப் பற்றிச் சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். தமிழ்நாட்டின் கல்விநிலையைப் பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். தமிழில் எழுதப் படிக்கத் தெரியாமலேயே பட்டமேற்படிப்பு வரை படித்து முடித்து விடக்கூடிய கல்விமுறையைக் கொண்ட 'பெருமை வாய்ந்த' மாநிலங்களில் முதலிடம் வகிக்கிறது. மடிக்குழைப் (Matriculation) பள்ளிகள் புற்றீசல் போலப் பெருகி, தமிழில் பேசினால் அபராதம் போன்ற அபவாதங்களை ஒரு காலகட்டத்தில் பரப்பிக் கொண்டிருந்தன. குழலையும் யாழையும் ஒத்த தமிழைவிட, ஆங்கிலப் பியானோவில் தங்கள் மழலைச்சொல் கேட்கவிரும்பி, இம்மடிக்குழைப் பள்ளிகளில் சேர்க்க வரிசையில் நின்று கொண்டிருந்த காலம் அது. ஆங்கில மோகத்தைக் காசாக்கினாலும், இவ்வலையில் சிக்காத பெற்றோர்களை ஈர்க்க இன்னும் சில தூண்டில்களும் தேவைப்பட்டன இப்பள்ளிகளுக்கு. பெரிய வகுப்புகளில் பயிலும் பாடங்களைச் சிறு வகுப்புகளிலேயே அறிமுகப்படுத்துதல், கராத்தே, நாட்டியம் போன்றவற்றைப் பயிற்றுவித்தல் போன்ற தூண்டில்களால் ஈர்த்து வந்தன. இந்த நிலையில், அரசுப் பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்காகவும், ஆய்வு செய்வதற்காகவும், அரசுப் பணியில், தொடர்ச்சியாகச் சென்னை சென்று கொண்டிருந்த திரு. நசன் என்பவரால் பொள்ளாச்சியில் சூளேசுவரன்பட்டி என்னும் ஊரில் தொடங்கப்பட்ட பள்ளிதான் தாய்த்தமிழ்த் தொடப்பப்பள்ளி. பொள்ளாச்சியைத் தாண்டி. சீஷெல்ஸ் மற்றும் ஜெர்மனியின் எசன் நகரங்களில் இத்தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி தன் கிளைகளை விரித்திருக்கிறது.

'தமிழ் கற்றுக் கொள்ள ஊக்குவித்து தமிழில் செய்தித்தாள் படிக்கும் வரை உதவி செய்தால் போதும். அவர்களே பிறகு தேடி படித்துக் கொள்வார்கள். இதற்கான பாடங்களை அன்பாக, இயல்பாக, நெருக்குதலில்லாமல் சொல்லிக் கொடுத்தால் மிகப் பெரிய வெற்றியைக் காண முடியும். தமிழ் படிக்கச் சொல்லிக் கொடுப்பது என்பது தமிழ் மாணவர்களுக்குக் கண் கொடுப்பது போன்றது. இயங்க நினைப்பவர்களுக்குத் தமிழம் வலை உதவக் காத்து இருக்கிறது' என்கிறார் தமிழம் டாட் நெட் என்னும் வலைப்பக்கத்தை நிர்வகித்து வரும் திரு. நசன் அவர்கள். இந்தத் தமிழம் வலையின் ஓர் அங்கமாக இருப்பதுதான் 'அரியவை' என்னும் பகுதி. இப்பகுதியில்தான் இக்கட்டுரையின் முதலில் உள்ள பகுதி இடம்பெற்றிருக்கிறது. அரியதாகவும், வியப்பூட்டுவதாகவும் அமைத்துள்ள தமிழியச் செயற்பாடுகளைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்துவதாக அமைந்துள்ளது இப்பகுதி.

http://www.thamizham.net
http://www.naalorunool.com/pezhai/pezhai-u8.htm
http://www.naalorunool.com/pezhai/rare/rare19-u8.htm

போன்ற வலைப்பக்கங்களில் இப்பள்ளி பற்றியும் தமிழர்களுக்குப் பயனளிக்கக்கூடிய வேறு பகுதிகளையும் காணலாம்.

'புகைப்படங்கள் தான் சான்றாவணங்களாக அமைகின்றன. நூற்றாண்டுகளுக்கப் பின் இவை சாட்சிகளாக இருந்து வரலாறு காட்டும்.' என்ற முன்மொழியுடன் புகைப்படப்பகுதியும் உண்டு இவ்வலைத்தளத்தில். என்னைக் கவர்ந்த வாசகங்களோடு கூடிய சில புகைப்படங்கள் கீழே உள்ளன.







































இளைய தலைமுறையினரைத் தமிழின்பால் திருப்ப விழையும் திரு. நசன் அவர்களை வரலாறு.காம் நன்றியோடு வாழ்த்துகிறது.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.