![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 6
![]() இதழ் 6 [ ஜனவரி 15 - ஃபிப்ரவரி 14, 2005 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
மகேந்திரர் நாடகங்கள்
(அப்பொழுது பாசுபதன் ஒருவன் வருகிறான்) <பாசுபதன்> : சத்தியசோமா, ஏன் கூச்சலிடுகிறாய்? <கபாலி> : ஓ! பாப்ருகல்பா. தன்னைத் துறவி என்று சொல்லிக்கொள்ளும் இந்த துஷ்டன் எனது பிச்சைக் கபாலத்தைத் திருடிக்கொண்டு திருப்பித் தர மறுக்கிறான். <பாசுபதன்> : (தனக்குள்) நான் எதைச் செய்திருக்க வேண்டுமோ அதை அந்த பரலோகத்துக் கந்தருவர்களே செய்துவிட்டார்கள். ஏனென்றால்: வெறும் பிடிப்புல்லால் ஒரு பசுதன்னை வரும்படிப் பின்னே பணிப்பவன் போல உடுதுணி முகப்பில் கடுமெனப் பிணித்த தொரு சில சிப்பிக் காசுகள் கொண்டு அருமென்னன்பை நாவிதன் தன்னின் சிறுபணிப் பெண்ணை வசங்கொண்டானே. அதனால் இந்த என் பகைவனை இவனையே துணையாக வைத்து நசுக்கி விடுகிறேன். (சப்தமாக) ஓ! நாகசேனா, அவன் சொல்வது உண்மையா? <துறவி> : ஆண்டவனே, நீருமா இப்படிப் பேசிகிறீர்? கொடாததைக் கொள்ளுவதிலிருந்து விலகல் எங்கள் கொள்கை; வீண்பேச்சுக்கு விலகல் எங்கள் கொள்கை; அவமானங்களுக்கு விலகல் எங்கள் கொள்கை; வாழ்க்கைச் சிதைவிலிருந்து விலகல் எங்கள் கொள்கை; நேரந்தவறி உண்ணுவதிலிருந்து விலகல் எங்கள் கொள்கை; புத்தம் தர்மம் சங்கம் என் அடைக்கலம். <பாசுபதன்> : இது அவர்களுடைய ஒழுக்க நடத்தை எப்படிப் போகிறது என்பதைக் காட்டுகிறது. இப்பொழுது இதற்கு உன்னுடைய பதில் என்ன? <கபாலி> : வீண்பேச்சுக்கு விலகல் எங்கள் கொள்கை. <பாசுபதன்> : இரண்டும் சரி. இந்தக் காரியத்தை எப்படித் தீர்மானிப்பது? <துறவி> : புத்தருடைய விதிகளைக் கடைப்பிடிக்கும் ஒரு துறவிக்கு மதுக் கிண்ணத்தை எடுப்பதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறது? <பாசுபதன்> : யூகத்தால் அமைகிற முகாந்திரம் எதுவும் போதுமான நிரூபணம் ஆகாது. <கபாலி> : கண்கூடான காட்சியே இங்கே இருக்கும்போது காரணவாதம் ஏதும் செல்லாது! <பாசுபதன்> : எங்கே அந்தக் காட்சி? <தேவசோமா> : ஆண்டவனே, அதுதான் அவன் கையிலிருக்கும் கபாலவோடு. ஆடைக்கடியில் ஒளிக்கப்பட்டிருக்கிறது. <பாசுபதன்> : கேட்டாயா? <துறவி> : ஆண்டவனே, இந்தக் கபாலவோடு வேறு யாருக்கும் சொந்தமானதல்ல. <கபாலி> : அப்படியானால் காட்டு. <துறவி> : நல்லது. (அவர் காண்பிக்கிறார்) <கபாலி> : பாருங்கள் மகேசுவரர்களே, இந்தக் கபாலி செய்கிற அநியாயத்தையும் பௌத்தர்களின் லட்சணமான நடத்தையையும்! <துறவி> : கொடாததைக் கொள்ளுவதிலிருந்து விலகல் எங்கள் கொள்கை; வீண்பேச்சுக்கு விலகல் எங்கள் கொள்கை; அவமானங்களுக்கு விலகல் எங்கள் கொள்கை; வாழ்க்கைச் சிதைவிலிருந்து விலகல் எங்கள் கொள்கை; நேரந்தவறி உண்ணுவதிலிருந்து விலகல் எங்கள் கொள்கை; புத்தம் தர்மம் சங்கம் என் அடைக்கலம். (துறவியும் கபாலியும் ஆடுகிறார்கள்) <துறவி> : ஆ! தொலைந்தது! வெட்கப்படவேண்டியவன் ஆடுகிறான். <கபாலி> : ஆ! ஆடுவது யார்? (சுற்றிப் பார்த்து) நிச்சயமாக இது எதனால் என்றால்; காணாமல் போன எனது பிச்சைக் கபாலத்தைக் கண்டுகொண்டதால் மலையத்துத் தென்றலால் என் களிப்பென்னும்க்கொடி அசைவதைக் கண்டு நான் ஆடுகிறேன் என்று ரசிக்கிறான் போலும். <துறவி> : ஆண்டவனே, நீங்கள் அதைக் காணாதது ஏன்? அதனுடைய நிறத்தை ஏன் கவனிக்கவில்லை? <கபாலி> : அங்கே கவனிக்க என்ன இருக்கிறது? நான் பார்த்தாயிற்று. அந்த கபாலவோடு ஒரு காகத்தை விடவும் கருப்பு. <துறவி> : அப்படியானால் அது என்னுடையது என்று ஒத்துக்கொள். <கபாலி> : மெய்தான், ஒத்துக்கொள்கிறேன் உன்னுடைய நிறம் மாற்றும் திறமையை! கமல மலர்தன் வெண்ணிதழ் போலும் இயல்பாய் இருந்த விவ்வாடை தன்னை விடியற் காலைச் செம்புச் சிவப்பாய் வண்ணமாறச் செய்தாய் திறனால் இன்னும்: மஞ்சள் சிவப்பு ஆடை மருங்குள் முன்னது உன்பால் வந்ததன் பின்னர் மற்றென் நிறம்பெறும் கபாலவோடு. <தேவசோமா> : விதிகெட்டவள் தொலைந்தேன். எல்லாச் சிறப்புக்களையும் கொண்டதான ஓடு தாமரை வீற்றிருப்பாளின் தலையின் பெருமைகளையெல்லாம் பெற்றிருந்த முழுநிலவின் தெளிவையுடையது. மதுவின் மங்காத வாடை கொண்டது. இவனுடைய அழுக்கு ஆடைபட்டு இந்த இழிநிலைக்கு ஆக்கப்பட்டுவிட்டதே. (அவள் புலம்புகிறாள்) <கபாலி> : அன்பே, கவலைப்படாதே. அதை மறுபடியும் தூய்மைப் படுத்திவிடலாம். பொருத்தனை மூலம் சான்றோர் தங்கள் பாவங்களைக் கழுவியிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக: பிரமதேவனின் சிரமது அறுத்தும் பெருந்தவங் கொண்டு சூடாமணியிறை பவமறக் கண்டது என்பது ஒரு தலை துவசுதர் மைந்தன் திரிசிரசைக் கொல்பழி அன்று இந்திரனும் நின்று தீரும்படி நூறு வேள்விகளைத் தந்து அந்த வழி மாசு நீங்கியதும் உண்டு அந்தப்படி. ஓ, பாப்ருகல்பா; அப்படித்தானா? <பாசுபதன்> : ஆகம முறைப்படி நீ சொல்வது சரிதான். <துறவி> : சரி, நிறம் என்னால் வந்ததுதான், வடிவம் உருவம் பற்றி என்ன? <கபாலி> : மாயாதேவியின் குழந்தையின் பரம்பரை நீயில்லையா? <துறவி> : எவ்வளவு நேரந்தான் இப்படி உன்னுடன் வாதம் செய்து கொண்டே போவது? இதோ எடுத்துக்கொள், ஆண்டவனே. <கபாலி> : நல்லது. இப்படித்தான் புத்தர் தானமுழுமை பெற்றார். <துறவி> : இது இப்படியே போய்க்கொண்டிருந்தால் எனக்கு அடைக்கலம் என்ன? <கபாலி> : நிச்சயமாக புத்தம் தர்மம் சங்கம். <பாசுபதன்> : என்னால் இதைத் தீர்த்துவைக்க முடியவில்லை. வழக்கு மன்றத்துக்குச் செல்லலாம். <தேவசோமா> : ஆண்டவனே, நாம் அப்படிச் செய்தால் நமது கபாலவோட்டுக்குப் பிரிவு உபசாரந்தான். <பாசுபதன்> : நீ என்ன சொல்லுகிறாய்? <தேவசோமா> : மடத்திலே இந்த ஆசாமி வாழ்ந்த வசதி நிறைந்த வாழ்க்கையினால் சேர்த்துக் கொண்ட செல்வத்தைப் பயன்படுத்தித் தான் நினைத்தபடியே நீதிபதிகள் வாய்களையெல்லாம் மூடிவிடுவான். பாம்புத் தோலையே உடைமையாகக் கொண்ட ஒரு கபாலியினுடைய ஏழைப்பணிப்பெண் நான். வழக்கு மன்றம் செல்ல எங்களிடம் என்ன வைத்திருக்கிறோம்? <பாசுபதன்> : அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நிலைமையில் துணிவு நேர்மை தகுதி இருந்தும் இளமனம் உயர்குடி நடுநிலை காப்போர் சாற்றுதற் கரியோர் மண்டபந் தாங்குந்தூணது போலும் விண்டவர் தருவார் துணையே யாவும். <கபாலி> : இது போதும். நேர்மையான ஒருவருக்குச் சிறிது அச்சமும் தேவையில்லை. <துறவி> : ஓ, ஆண்டவனே, நீங்கள் பாதை காட்டுங்கள். <பாசுபதன்> : நிச்சயமாக ... (எல்லோரும் புறப்படுகிறார்கள்) (அப்பொழுது ஒரு பைத்தியக்காரன் வருகிறான்) (தொடரும்) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |